Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.
Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு சமீபத்தில் மூத்த ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. வயது வாரியாக இந்த ஓய்வூதிய உயர்வின் அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். மத்திய அரசு 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும். பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, கருணை உதவித்தொகை என்ற பெயரில் மத்திய அரசு இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கும்.
மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறந்த செய்தி கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பானது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CCS விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் தேவைகளுக்கு இணங்க இந்த மாற்றம் வருகிறது.
மத்திய அரசு 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும். பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, கருணை உதவித்தொகை என்ற பெயரில் மத்திய அரசு இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கும்.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற தகுதியுள்ள மத்திய அரசு பணியாளர்கள் இந்த கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வயதைப் பொறுத்து கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை ஊதியம் தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு கூடுதல் ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? வயது வாரியாக கூடுதல் ஓய்வூதிய விவரங்களை இங்கே காணலாம்.
80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 85 முதல் 90 வயதுடைய ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
90 முதல் 95 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 95 முதல் 100 வயதுடையவர்கள் 50 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சூப்பர் சீனியர் சிடிசன்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை கருணைத் தொகையாக பெறுவார்கள்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் அறிவிப்பில், ஓய்வூதியதாரர் நிர்ணயிக்கப்பட்ட வயதை அடையும் மாதத்தின் முதல் நாளிலிருந்து அவருக்கான கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ள வேண்டுமானால், 20 ஆகஸ்ட் 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர்கள் ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவர்கள். ஆகஸ்ட் 1, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர்கள் ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தில் இருபது சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகளும் வங்கிகளும் புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை தெளிவாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தாமதமின்றி சரியான பலன்களைப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
ஓய்வூதியதாரர்களுக்கு அதிக வயதாகும் போது அவர்களது தேவைகளும் வாழ்க்கைச் செலவுகளும் அதிகமாகின்றன. இந்த நிலையில் அதிகமாகும் செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில் கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.