அதிகாலை கனவில் பச்சிளம் குழந்தைகள் வந்தால் வினையா? வரமா?

Kulanthai Kanavu palan | அதிகாலை கனவில் பச்சிளம் குழந்தை வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா. வரமா? வினையா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 26, 2024, 06:05 PM IST
  • குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்?
  • அதிகாலையில் வந்தால் உங்களுக்கு வரம்
  • செல்வம் சேரப்போகிறது என்பதன் சகுணம்
அதிகாலை கனவில் பச்சிளம் குழந்தைகள் வந்தால் வினையா? வரமா? title=

Kulanthai Kanavu palan Tamil | கனவுகள் பலிக்கும் என்பதை ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தீர்க்கமாக நம்புக்கிறார்கள். சாஸ்திரங்களின்படி கனவில் எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக கனவு எந்த நேரத்தில் வருகிறது? எப்படி வருகிறது என்பதை பொறுத்து பலன்கள் இருக்கும். காலையில் வரும் கனவு, மதியத்தில் வரும் கனவு, முன்னிரவில் வரும் கனவு, அதிகாலை கனவு என எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றன. பசு மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதெல்லாம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி, பச்சிளம் குழந்தைகள் அதிகாலை கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். 

பச்சிளம் குழந்தைகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

பச்சிளம் குழந்தைகள் பொதுவாக தெய்வத்துக்கு ஒப்பானவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் எந்த சூது வாதும் அறியாத உண்மையான மனத்தை கொண்டவர்கள். தூய்மையான, பரிசுத்தான எண்ணங்களுக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள். அவர்கள் ஒருவரின் கனவில் வந்தால் நிச்சயம் நல்லதே நடக்கும். உங்களுக்கு நல்லது நடக்கப்போகிறது என்பதற்கான மிகப்பெரிய சகுணம் தான் குழந்தைகள் கனவில் வருவது. அதுவும் சிரித்த முகத்துடன் வந்துவிட்டால் உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் நிச்சயம் முடிவுக்கு வரப்போகிறது என அர்த்தம். கடன், குடும்ப பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் நிச்சயம் உங்களைவிட்டு செல்லப்போகிறது. மகா லட்சுமியின் அருளால் நீங்கள் எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும் நீங்கள் விடுபடப்போகிறீர்கள் என அர்த்தம். 

பச்சிளம் குழந்தைகள் கனவில் அழுதால் என்ன அர்த்தம்?

பச்சிளம் குழந்தைகள் கனவில் வருவது ஒரு வரமே என்றாலும் அவர்கள் அழுதால் உங்களுக்கு தாங்கமுடியாத கஷ்டம் வரப்போகிறது என அர்த்தம். குடும்பம், பண வரவு, ஆரோக்கியம் எல்லாவற்றிலும் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான சகுணத்தின் அறிகுறி. இதுவரை எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொண்டிருந்த நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளின் அழுகை சுட்டிக்காட்டுகிறது. அதனால், உடனே இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்றுவிடுங்கள். குடும்பத்தில் என்ன பிரச்சனை இருந்தாலும் நிதானத்தை கடைபிடியுங்கள். பொறுமை மிக மிக அவசியம். தொழிலில் இருந்தால் அவசரம் காட்டாதீர்கள். கடும் சொற்களை யாரிடம் பேசாதீர்கள். 

மேலும் படிக்க | ஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!

பரிகாரம் என்ன?

உங்களை சுற்றியிருப்பவர்கள் யாரேனும் கஷ்டத்தில் இருந்தால், அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள். நீங்களே மிகவும் கஷ்டத்தில் இருந்தால் உங்களுக்கு பிடித்தமான கோவிலுக்கு சென்று வாருங்கள். தினம்தோறும் நல்ல விஷயங்களை மட்டுமே எண்ணுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நல் வழியில் என்னால் சமாளிக்க முடியும் என்ற உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். முன்பு செய்த தவறுகள் தான் இப்போது பிரச்சனையாக வருகிறது என்பதால் அதனை தீர்க்க முயல வேண்டுமே தவிர, அதனை இன்னும் பெரிதாக்க முயலக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகும்.

மேலும் படிக்க | கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News