இரட்டை இலை வழக்கினை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : May 1, 2018, 05:19 PM IST
இரட்டை இலை வழக்கினை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!!  title=

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திற்கு போட்டிபோட்டது.

இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான, இன்று விசாரணை மேற்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

Trending News