Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிகா வைரசின் பீதி நாட்டு மக்களை பற்றியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 11:50 AM IST
  • ஜிகா வைரஸ் சோதனைக்கான பலவித ஏற்பாடுகளையும் தமிழக சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
  • சென்னையில் ஜிகா வைரஸ் சோதனை மையத்தின் செயல்பாடு தொடங்கியுள்ளது.
  • ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை.
Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு title=

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிகா வைரசின் பீதி நாட்டு மக்களை பற்றியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அனைத்து பணிகளையும் தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது.

ஜிகா வைரஸ் சோதனைக்கான பலவித ஏற்பாடுகளையும் தமிழக சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது. வழக்கமான பரிசோதனையைத் தவிர பிசிஆர் பரிசோதனை மூலமாகவும் ஜிகா வைரசைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை டுத்து வருகிறது. 

சென்னையில் (Chennai) ஜிகா வைரஸ் சோதனை மையத்தின் செயல்பாடு தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான சோதனை மையத்தின் செயல்பாடு தொடங்கி விட்டது. 

ALSO READ: அச்சுறுத்தும் Zika Virus, அதிகரிக்கிறது எண்ணிக்கை: அறிகுறிகள், சிகிச்சை என்ன

கேரளாவின் எல்லையில் உள்ள தமிழகத்தின் 65 பகுதிகளில் இதுவரை ஏடிஎஸ் கொசுக்களின் மாதிரிகளின் சோதனைகள் செய்யப்படுள்ளன. இவற்றில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் இருப்பது பற்றி தெரியவரவில்லை என்று தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லைப் பகுதிகளைப் போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜிகா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். மேலும் கேரளாவிலிருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 

ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள்

- பொதுவாக கொசுக்களால் (Mosquito) பரவும் இந்த நோய்க்கான அறிகுறிகளில் லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும். 

- ஜிகா வைரஸ் 3–14 நாட்கள் வரை மனித உடலில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் பொதுவாக 2–7 நாட்கள் வரை நீடிக்கும். 

- ஜிகா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் தென்படுவது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸ் நோய்க்கான சிகிச்சை:

- ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

- அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது நல்ல பயன்களைத்  தரலாம்.

- அதிக ஓய்வு எடுப்பது அவசியம். தேவையற்ற அலைச்சலைத் தடுக்க வேண்டும்.

- நீரிழப்பைத் தடுக்க அதிக திரவங்களை குடிக்கவும்.

- காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க தேவையான மருந்து எடுத்துக் கொள்ளவும்.

பாதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதிபடுத்தப்படும் வரை, ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDS) எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ALSO READ: கேரளாவில் முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News