COVID தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் மதுரை இளைஞர் மரணம்: காரணம் குறித்து ஆய்வு!

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என தொடர்ந்து நமது அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2021, 09:47 PM IST
  • மதுரையில் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார்.
  • இன்று காலை அவர் கழிப்பறைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
  • அவரது உடற்கூராய்வு முடிந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெளிவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
COVID தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் மதுரை இளைஞர் மரணம்: காரணம் குறித்து ஆய்வு! title=

மதுரை: கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என தொடர்ந்து நமது அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த ஆர்வத்துக்கு தடை போடும் விதமாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் (Madurai) நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார் என தகவல்கல் தெரிவிக்கின்றன. எனினும், அவரது உடற்கூராய்வு நடந்து முடிந்த பின்னரே, இறப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அந்த இளைஞர் மதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர். 29 வயதான அந்த இளைஞர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். 

ALSO READ:Covaxin செயல்திறன் அபாரம்! பாரத் பயோடெக்கின் ஆய்வு முடிவு! 

நேற்று மதியம் அவரும் அவரது மனைவியும் இரண்டு மணியளவில் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வழக்கமான செயல்முறையின் படி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, தடுப்பூசி மையத்தில் அவர்கள் சில நேரம் காத்திருந்தனர். அப்போது அவருக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. 

இன்று காலை அவர் கழிப்பறைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனைடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அவருக்கு சர்க்கரை நோய் (Diabetes) உள்ளது என்றும், வேறு எந்த இணை நோய்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆறு மாதங்களாக சர்க்கரை நோய்க்கான எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், அவரது உடற்கூராய்வு முடிந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெளிவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 4,013 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 115 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:Post-COVID-19 syndrome: மறதியை கொடுக்கும் COVID-இன் பக்க விளைவுகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News