ஜெ., சொத்து வழக்கு: ரூ. 1 லட்சம் அபராதம்

Last Updated : Dec 20, 2016, 07:07 PM IST
ஜெ., சொத்து வழக்கு: ரூ. 1 லட்சம் அபராதம் title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து சம்பந்தமான வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெலுங்கானா மாநிலத்தில் திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 14.5 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த சொத்துக்கள் அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு கைப்பற்ற வேண்டும் என உத்தரவிடக்கோரி, ஐதாராபாத் ஐகோர்ட்டில் கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. 

இன்று காலை  இந்த வழக்கு விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு பொதுநல நோக்கோடு தொடரப்படவில்லை. விளம்பர நோக்கோடு தொடரப்பட்டு ள்ளது என்று கூறினார். மேலும் வழக்கை தொடர்ந்த கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி அமைப்பிற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார். அவருக்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவருடைய மனுவையும் தள்ளுபடி செய்தது.

Trending News