அமலுக்கு வந்தது அனைவருக்கும் E-பாஸ் முறை; புதிய நடைமுறைகள் என்னென்ன?...

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது..! 

Last Updated : Aug 17, 2020, 09:24 AM IST
அமலுக்கு வந்தது அனைவருக்கும் E-பாஸ் முறை; புதிய நடைமுறைகள் என்னென்ன?...  title=

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது..! 

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, E-பாஸ் முறை அமலில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, அவசர மருத்துவ தேவை போன்றவற்றுக்கு செல்ல விரும்புவோருக்கு மட்டும் E-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், வெளியூர் செல்ல விரும்புவோர், பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர். 

ALSO READ | TN அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

இதற்கிடையில், போலி E-பாஸ், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் போன்ற அத்துமீறல்களும் அதிகரித்தன. எனவே, E-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என, பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், E-பாஸ் நடைமுறையை ரத்து செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறையை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்தார். இதன்படி 'ஆதார்' அல்லது ரேஷன் கார்டு விபரம் அளிக்கும் அனைவருக்கும் எந்த தாமதமும் இன்றி இ-பாஸ் வழங்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயம், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்த தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள E-பாஸ் நடைமுறையே அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது. 

Trending News