புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தேடி வரும்

Budh Gochar April 2022: புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் வணிகத்தின் காரணியான புதன் கிரகம் அடுத்த வாரம் 25-ஆம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார். புதனின் ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களைக் கொண்டு வரப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2022, 06:43 AM IST
  • புதன் பெயர்ச்சி நல்ல பலன் தரும்
  • ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார் புதன்
  • தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும்
புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தேடி வரும் title=

ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது. ஒருவருக்கு பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனத்தைத் தரக்கூடியதும், சிறப்பான சிந்தனையால் தன் தொழில், வணிகத்தில் வெற்றியை பெற உறுதுணையாக இருக்கும் கிரகம் புதன் பகவான். இம்முறையும் புதன் சஞ்சாரம் நாடு, உலகம் உட்பட 12 ராசிகளுக்கும் நன்மையோ தீமையோ ஏற்படும். அதன்படி புதன் பகவான் சம ஸ்தானமான செவ்வாய் ஆளக்கூடிய மேஷ ராசிக்கு ஏப்ரல் 8ம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார். தற்போது ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ள புதன் குறிப்பிட்ட ராசியினருக்கு சில அற்புத பலன் தர உள்ளார். அதுவும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் மிகவும் சாதகமாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை புதன் பிரகாசிக்கச் செய்யும்

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். வழக்கறிஞர்கள், ஊடகங்கள், மார்க்கெட்டிங், கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு இது நன்றாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பணத்துடன் முன்னேற்றத்தையும் தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு பெறலாம். வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி தொழில்-வியாபாரத்தில் பெரிய அனுகூலத்தைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணியை பாராட்டலாம். வியாபாரம் விரிவடையும். பெரிய ஆர்டர்களைக் வரலாம். எங்காவது பணம் சிக்கியிருந்தால், அதை இப்போது மீட்டெடுக்க முடியும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு சாதகமானது.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News