டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்-சபை எம்.பி-யாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டலடித்து 2014-ம் ஆண்டு பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.
என்.எஸ்.ஜி.விவகாரத்தில் பிரதமரின் வெளிநாட்டு கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது:
அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது. மோடியின் வெளியுறவுக்கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. வெளிநாடு பயணத்தின் போது அவர் என்ன செய்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 21 எம்.ஏல்.ஏக்களுக்கு ஆதாய பதவி வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.