நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்.
பருவமழை கிட்டத்தட்ட நாடு முழுவதும் பெய்து வருகிறது. பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கின் பல மாநிலங்களில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 3 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகள் நிரம்பி வழிகின்றன. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., 30, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், சென்னையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.