ஜெ., டிரைவர் மரண வழக்கு: போலீஸ் முன் ஆஜராகிறார் எம்எல்ஏ ஆறுகுட்டி

Last Updated : May 16, 2017, 10:17 AM IST
ஜெ., டிரைவர் மரண வழக்கு: போலீஸ் முன் ஆஜராகிறார் எம்எல்ஏ ஆறுகுட்டி title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக, இன்று காலை 11.30 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆஜராக உள்ளார்.

கடந்த 28-ம் தேதி ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் இறப்பதற்கு முன் கவுண்டாம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுகுட்டிக்கு 4 முறை மொபைலில் அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு செல்லும் போது அவ்வப்போது மட்டும் கனகராஜ் காரில் என்னை அழைத்து செல்வார். கனகராஜ் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை பணியில் இருந்து நீக்கி விட்டேன். கனகராஜ் போனுக்கு அழைப்புகள் சென்ற காரணத்தால் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளேன் என்று எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.

எம்எல்ஏ ஆறுகுட்டி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News