பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது

கோவை விமானப் படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷை கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 07:19 AM IST
பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது title=

கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய  விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் லெப்டினன்ட் அதிகாரி கைது செய்யப்பட்டார். 

கோவை (Coimbatore) சுங்கம் பகுதியில் இந்திய விமான படை (Indian Air Force) பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து விமான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த மைரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். 

ALSO READ | நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, டெல்லியை சேர்ந்த 28 வயதான பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பெண் அதிகாரிக்கு காலில் அடிபட்டுள்ளது. இதற்கான சிகிச்சையோடு, தொடர்ந்து வலி நிவாரண மருந்தும் எடுத்துள்ளார். இதனால் அவர் ஓய்வு எடுக்க அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இரண்டு வாரங்களான பின்னரும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, அமித்தேஷ் ஹார்முக் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் அபிடவிட் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷ் மீது 376 என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி  வழக்கின் தன்மை இருக்கும் என தெரிவித்தார்.

விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News