போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?

தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 7, 2024, 03:39 PM IST
  • காதலியுடன் பேசிக்கொண்டிருந்த சிறுவன்.
  • காலின் உள்ளே ஊர்ந்து சென்ற பாம்பு.
  • அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்.
போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது? title=

சமூக ஊடகங்களில் பல நம்பமுடியாத மற்றும் வியக்க வைக்கும் வீடியோக்கள் பல உள்ளன. இவை பார்வையாளர்களை அடிக்கடி பிரமிப்பில் ஆழ்த்துகிறது. சில வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும், இயல்பில் இருந்து தனித்தும் நிற்கும். இது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் பல்வேறு தளங்களில் பரவி, எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. கண்ணைக் கவரும் இந்தக் காட்சியில் ஒரு டீனேஜ் பையன், தன் காதலியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது ​​எதிர்பாராதவிதமாக தன் அருகில் வந்த ஒரு பாம்பைப் பற்றி அறியாமல் ஆனந்தமாக இருக்கிறான். பாம்பு நுழையும் தருணம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க | வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!

பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோவில், இயற்கையின் அழகால் சூழப்பட்ட ஒரு பரந்த திறந்தவெளியில் ஒரு சிறுவன் சாதாரணமாக அமர்ந்து செல்போனில் உரையாடலில் மூழ்கிய உள்ளார். தனது காதலியுடன் உரையாடலில் ஆழ்ந்து தனது சுற்றுப்புறங்களை மறந்துவிடுகிறார், தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் பற்றி முற்றிலும் அறிந்திருக்கவில்லை. இதற்கிடையில், ஒரு திடுக்கிடும் நிகழ்வுகளில் ஒரு பாம்பு அவரை நோக்கி வேகமாக வருகிறது. தனது அருகில் பாம்பு வருவதை உணர்ந்து கொள்வதற்கு முன்பே, பாம்பு அவரது கால்களுக்கு கீழே செல்ல தொடங்குகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A pp_editor)

அந்த சிறுவன் திடீரென்று ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தபோது, ​​அவன் உள்ளுணர்வாகத் திரும்பினான். அவன் பார்த்தது அவனை முற்றிலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு. அதே போல அந்த சிறுவனும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடுகிறான். பயத்தால் தூண்டப்பட்ட அவன் எல்லா திசைகளிலும் வேகமாக ஓட ஆரம்பித்தான். இந்தக் காணொளியில் பதிவாகியுள்ள காட்சிகளைப் பார்த்த பிறகு பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வைரல் வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கில் cg_jp_editor என்பவரால் பகிரப்பட்டள்ளது. இந்த தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: புலியை சங்கிலியால் கட்டி... முதுகில் சவாரி - பாகிஸ்தான் பிரபலம் மீது எழும் கண்டனங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News