Rasipalan | 100 ஆண்டுகளுக்குப்ப பிறகு 6 கிரகங்களின் அரிய சேர்க்கை நடப்பதால் மூன்று ராசிகளுக்கு அபூர்வ அதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது.
Rasipalan March | ஜோதிடத்தில் அதிசய நிகழ்வாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 6 கிரகங்களின் அபூர்வ சேர்க்கை காரணமாக மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது. அவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மற்ற கிரகங்களுடன் இணைவது இயல்பாக நடக்கக்கூடியது. இது ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் இந்தமுறை மீன ராசியில் 6 கிரகங்கள் இணையும் ஆபூர்வ சேர்க்கை நடக்கப்போகிறது.
ஏனென்றால் ராகுவும், சுக்கிரனும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் சஞ்சரிப்பார்கள். அதே நேரத்தில், கர்மவினையை அளிக்கும் சனியும் மார்ச் 29 அன்று மீன ராசிக்குள் நுழைவார். பிப்ரவரி 27 அன்று புதன் மீன ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.
மேலும், மார்ச் 14 முதல் சூரியனும் இந்த ராசியில் இருப்பார். மார்ச் 28 அன்று சந்திரனும் இந்த ராசிக்குள் நுழைவார். இந்த வழியில், மார்ச் 29 அன்று மீன ராசியில் 6 கிரகங்களின் அரிய சேர்க்கை உருவாகும்.
இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கும் வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
மிதுனம் | ஆறு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் அபூர்வ நிகழ்வு உங்கள் ஜாதகத்தில் தொழில் மற்றும் வணிகத்தின் இடத்தில் உருவாகும். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும், உங்கள் கடின உழைப்பும் திறமையும் பணியிடத்தில் பலனளிக்கும்.
அதேசமயம் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும், மேலும் பழைய முதலீடுகளிலிருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். உங்கள் உடல்நலம் மேம்படும், உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் இருக்கும். மேலும், தந்தையுடனான உறவு வலுவடையும்.
கடகம் | ஆறு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நன்மையை கொடுக்கப்போகிறது. ஏனென்றால் இந்த அபூர்வ சேர்க்கை உங்கள் ராசியின் அதிர்ஷ்ட இடத்தில் உருவாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும்.
வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் இருக்கும். மாணவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிதி நெருக்கடி தீர்க்கப்பட்டு, எதிர்பார்த்தளவுக்கான நிதி நிலைமை வலுவடையும். இந்த நேரத்தில், நீங்கள் வேலை அல்லது வணிக நோக்கங்களுக்காக பயணம் செய்யலாம்.
தனுசு | தனுசு ராசிக்காரர்களுக்கு ஆறு கிரகங்களின் சேர்க்கை மிக சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த அபூர்வ சேர்க்கை உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் உருவாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் பொருள் இன்பங்களை அடையலாம்.
இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். அதே நேரத்தில், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் தடைபட்ட வேலை முழுமையடையும். உங்கள் நிதி நெருக்கடி குறையும். உங்கள் மாமியார் மற்றும் தாயாருடனான உங்கள் உறவு வலுவடையும்.