தோனி: சிஎஸ்கே அணியோட வெற்றி பார்முலா அது... அந்த சீக்ரெட்டை சொல்ல மாட்டேன்..!

dhoni: சிஎஸ்கே அணிக்கு வந்தால் மட்டும் சீனியர் பிளேயர்கள் விளையாடுவது எப்படி? என்ற சீக்ரெட்டை சொல்ல மாட்டேன் என தோனி தெரிவித்துள்ளார். 

 

1 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிவிட்டார். இப்போது சொந்த ஊரில் பயிற்சி மேற்கொண்டு வரும் தோனி அங்கிருந்தவாறே சிஎஸ்கே பிளேயர்களுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.  

2 /8

மார்ச் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தொடக்க இருக்கிறது. தோனியும் இந்த பயிற்சி முகாமில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.   

3 /8

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் வாட்சன், ரஹானே ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.  

4 /8

அதாவது, மற்ற அணிகளில் விளையாடாமல் இருக்கும் சீனியர் பிளேயர்களை சிஎஸ்கே குறிவைத்து எடுக்கிறது. அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தபிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என தோனியிடம் கேட்டனர்.  

5 /8

அந்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி பார்முலா. டாப் சீக்ரெட்டும் கூட. அதனை கூறிவிட்டால் என்னை அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.   

6 /8

மேலும், கோலா நிறுவனங்கள் எல்லாம் எப்படி தங்களின் தயாரிப்பு பார்முலாவை சிக்ரெட்டாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற சீக்ரெட் பார்முலா அது. அதனை வெளியில் சொல்லமாட்டேன் என கூறினார் தோனி.   

7 /8

வெற்றிக்கான பார்முலா குறித்து தோனி பேசும்போது, எல்லோரிடமும் திறமை இருக்கிறது. அதனால் தான் விளையாடுகிறார்கள். ஆனால், அதுமட்டும் போதாது. பயிற்சியில் கிடைக்கும் அனுபவங்களை உங்களின் அறிவுக்கூர்மை கொண்டு ஆராய்ந்து, அதில் இருந்து சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.  

8 /8

அப்போது நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இப்போது உங்களின் இறுதி முடிவுக்காக போராடிக் கொண்டே இருங்கள். அதற்கு பயிற்சியும் அறிவுக்கூர்மையும் அவசியம். அப்படி செய்தால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உறுதியாக கிடைக்கும் என தோனி தெரிவித்தார்.