ஆஷாட நவராத்திரி 2024... வாராகி அம்மன் அருளால் இனி எல்லாம் நலமே...!!

ஆஷாட நவராத்திரி 2024 ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. வாராகி அன்னையை வழிபாட ஆஷாட நவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், அன்னையின் அருளால் நற்பலன்களைப் பெறும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆஷாட நவராத்திரியின் 10 நாட்களில், வாராகி அம்மனை வழிபடுவதன் மூலம் அன்னையின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் நிலைத்திருக்க வாராகி அம்மனை வழிபடுவதனால் கிடைக்கும் பலன்களையும், ஆஷாட நவராத்திரி காலத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளையும் அறிந்து கொள்ளலாம்.

1 /8

ஆஷாட நவராத்திரியின் பத்து நாளும் வாராகி அன்னையை மனதில் நினைத்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லையை அந்த வாராகி அன்னை பார்த்துக் கொள்வாள். வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்பவர்களுக்கு வெற்றியும் சந்தோஷமும்  நிரந்தரமாக கிடைக்கும். 

2 /8

வாராகி அம்மன் வழிபாடு மூலம்,  உடல் நல பிரச்சனைகள் தீரும். கண் திருஷ்டி, ஏவல் பில்லி செய்வினை பிரச்சனை என அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். வீட்டை சுத்தமாக வைத்திருந்து, தினமும், காலையும் மாலையும் குளித்து, அம்மனின் திரு உருவப்படத்திற்கு முன்பாகவே ஒரு விளக்கு ஏற்றி வைத்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது பலன் தரும்.

3 /8

மேஷம்: வாராகி அன்னையின் அருளால் வாழ்வில் புதிய ஆற்றல் கிடைக்கும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். தடை பட்ட  பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வேலைகள் முடிவடைவதால் மனக்கவலை நீங்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /8

ரிஷபம்: வாராகி அம்மனின் அருள் பார்வையால்  திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேறும். அலுவலகச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவார்கள். வருமானத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்ப கௌரவம் உயரும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

5 /8

கடகம்: வாராகி அன்னையின் அருளால் அதிர்ஷ்டம் பெருகும். ஆன்மீக யாத்திரை செல்லலாம் அல்லது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும். தடைபட்ட பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லலாம். புதிய வேலை வாய்ப்புகளால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கலாம். மரியாதை அதிகரிக்கும். எல்லா வகையான உறவுகளும் வலுவடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

6 /8

சிம்மம்: வாராகி  அன்னையின் அருளால் வாழ்க்கையில் எல்லா வகையிலும் முன்னேற்றம் பெறுவீர்கள். திட்டமிட்ட முறையில் அனைத்தும் நடக்கும். வருமானம் உயரும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிதி நிலை வலுவாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தீரும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடல்நலக் கோளாறுகள் நீங்கி மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 

7 /8

கன்னி: வாராகி  அன்னையின் அருளால் உங்கள் வாழ்க்கை சீராகும். உங்கள் ஆளுமை மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.