மக்களே! நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இயற்கை மருத்துவம் இருக்கு!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவி வரும் நிபா எனும் அரிய வகை வைரஸுக்கு இயற்கை மருத்துவம் இருப்பதாக நாம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்!

Last Updated : May 27, 2018, 06:04 PM IST
மக்களே! நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இயற்கை மருத்துவம் இருக்கு!  title=

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவி வரும் நிபா எனும் அரிய வகை வைரஸுக்கு இயற்கை மருத்துவம் இருப்பதாக நாம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எளிய முறையினை, முன்னதாக அறிவுறுத்தியிருந்தனர். இந்த மருந்தானது நிபா வைரஸ் நோய் தொற்றுக்கும் உதவக் கூடியதாகவும்.

முன்னதாக, காலரா உள்ளிட்ட நோய்கள் எல்லாம் உருவாவதற்கு காரணம், வைரஸ் என்ற கிருமிகளால் தான். இந்த வைரஸ் கிருமிகள் பல பறவைகள், நாய்கள், பன்றிகள் போன்ற உயிரினங்களின் வழியாக மதிதர்களுக்கு எளிதில் ஊடுறுவுகிறது.

அவற்றை தடுக்க பவளமல்லிச் செடியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இதன் செய்முறைகளாவன,,! பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் இந்தச் செடியிலிருந்து நான்கு மற்றும் ஐந்து இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை 200 மில்லி தண்ணீரை நன்றாக கொதிக்க, வையுங்கள், பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டிய பின்பு அவற்றை நாள்தோறும் அருந்துங்கள். இப்படி நாள் தோறும் செய்து வந்தால், நம் உடலை எந்த ஒரு நோய் தோற்றும் அணுகாது.

Trending News