PM Kisan: பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை பெற இதைச் செய்யுங்கள்

PM Kisan Yojana Latest Update: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணை குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 5, 2022, 02:16 PM IST
  • பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை இன்று முதல் வரவு வைக்கப்படும்
  • பிரதமர் கிசான் சம்மன் யோஜனாவின் பயனாளிகளுக்கு EKYC ஐ அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் பலனைப் பெறும் விவசாயிகள் இப்போது ஜூலை 31 ஆம் தேதிக்குள் eKYCஐப் புதுப்பிக்க வேண்டும்.
PM Kisan: பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை பெற இதைச் செய்யுங்கள் title=

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பிரதமர் கிசான் சம்மன் நிதி தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மே 31ம் தேதி, பிரதமர் மோடி சார்பில் 11வது தவணையாக 2000 ரூபாய் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்பட்டது. அதன் பிறகு கேஒய்சி செய்வதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது 12வது தவணை கணக்கில் எப்போது வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு அரசு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று தவணைகளில் இரண்டாயிரம் வழங்கப்படுகிறது
இந்தத் தொகை தலா இரண்டாயிரம் வீதம் என்று விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக அரசால் வழங்கப்படுகிறது. முதல் தவணை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது விவசாயிகளின் கணக்கில் முதல் தவணை (11வது தவணை) மே 31ம் தேதி அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா? 

தற்போது 12வது தவணை ரிலீஸ்
தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த தவணையின் பணம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது வெளியான தகவலின் பேரில், 12வது தவணை தொகை செப்டம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு அரசு மூலம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மறுபுறம், அரசாங்கத்தால் இ-கேஒய்சி பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி இன் கடைசி தேதி ஜூலை 31
இந்தத் திட்டத்தின் அடுத்த அதாவது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணை எந்த இடையூறும் இல்லாமல் நீங்கள் பெற விரும்பினால், உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். இதற்குக் காரணம், பிரதம மந்திரி கிசான் யோஜனாக்கான கேஒய்சி அப்டேட் அவசியம். இ-கேஒய்சிக்கான கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் படிக்க | New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News