வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!

Peacock Feather And Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும். இதைத் தவிர வேறு என்ன நன்மைகள் நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2024, 11:58 AM IST
  • காதலியை தலையில் சூடிய மயிற்பீலி கண்ணன்!
  • காதலுக்கு மரியாதை கொடுக்கும் கிருஷ்ணர்
  • மயிலிறகு வாஸ்து
வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி! title=

Astrological Remedies Related To Peacock Feather : பகல் இரவு என பாகுபாடு பார்க்காமல் கடுமையாக உழைத்தாலும் பணப் பிரச்சனை இருந்துக் கொண்டே இருக்கிறதா? காதல் கனியவில்லை என்ற கவலையோ அல்லது தம்பதிகளுக்கு இடையில் நெருக்கம் இல்லாமல் விலக்கம் இருப்பதாக குறைபடுகிறீர்களா? காதல் மன்னன் கண்ணனுக்கு பிடித்தமான மயிற்பீலி இருந்தால் இந்த கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

மயில் இறகு எனப்படும் மயிற்பீலியை வீட்டில் வைத்தால் பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். தலையில் மயிலிறகை சூடிய கண்ணனுக்கு பிடித்தமானவர் ராதை. ராதையின் மீது மாளாக்காதலை வைத்திருந்தாலும், ராதையை கண்ணன் மணக்கவில்லை. ஆனால், ராதையை என்றென்றும் மனதில் சுமக்கும் கடவுள் கண்ணன், தனது நெஞ்சத்தை தொட்ட ராதையை தலையில் வைத்து கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடியுள்ளார் என்பது நம்பிக்கை.

கிருஷ்ணர் எவ்வளவு ஆபரணங்களை அணிந்திருந்தாலும், அவரது தலையில் சூடியிருக்கும் மணிமகுடத்திலும் மயிலிறகு இருக்கும். கண்ணன், மகுடத்தை அணியாவிட்டாலும், தலையில் மயிற்பீலியை மட்டுமாவது தரித்திருப்பார். 

மயிற்பீலியை கண்ணன் எப்போதும் அணியக் காரணம் என்ன தெரியுமா? கண்ணன், கோவர்தன மலையில் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தார். அப்போது, தெய்வீகமான இனிய மெல்லிசையில் மயங்கிய மயில்கள் பரவசத்துடன் நடனமாடத் தொடங்கின. மகிழ்ச்சியில் உதிர்ந்த மயிற்பீலிகளை பார்த்து கண்ணன் பரவசமடைந்தார். கண்ணனுக்கு தங்கள் இறகு பிடித்துவிட்டதால், மயில், மயிலிறகை தனது அன்புப்பரிசாக கிருஷ்ணனுக்கு வழங்கியது.

மேலும் படிக்க | ராகு சனி & சூரியன் மூன்று கிரகங்களும் சேர்ந்து 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்கும்!

பேரன்புடன் வழங்கப்பட்ட மயிலிறகில் மனதை பறிகொடுத்த கண்ணன், அதை தனது தலையில் வைத்ததும், கண்ணனின் அழகை பார்த்து மனம் மயங்கிய ராதையின் மையலும் காதலும் அதிகரித்ததாம். தனது மனதில் நிரந்தரமாக குடிகொண்ட காதலி ராதையின் காதல் அதிகரித்ததைக் கண்ட கண்ணன், ராதையின் அன்பிற்கு இணையான இடத்தை மயிலிறகிற்குக் கொடுத்துவிட்டார். அன்றுமுதல், கண்ணன் என்றாலே ராதை என்ற பெயர் நினைவுக்கு வருவதைப் போலவே, கண்ணனின் தோற்றம் என்றாலே, மயிற்பீலி அணிந்த கிருஷ்ணரே நினைவுக்கு வருவார்.
 
கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், அற்புதங்கள் நடந்தேறும். பணம் மழை போல் வீட்டில் பொழியும். இதைத் தவிர வேறு என்ன நன்மைகள் நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

கண்ணன் பிறந்த நாளான ஆவணி மாத அஷ்டமி நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி பண்டிகை ஆகஸ்ட் 26ஆம் தேதி திங்கட்கிழமை நாளன்று கொண்டாடப்படுகிறது. கண்ணனின் மயிலிறகும் புல்லாங்குழலும் அதிக அளவில் விற்பனை ஆகும் இந்த பண்டிகைக் காலத்தில் கண்ணனின் மனதிற்கு நெருங்கிய மயிலிறகை வீட்டில் வைப்பதால் தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | ஆகஸ்ட் 26 முதல் செவ்வாய் கிரகத்தால் மோசமாக பாதிக்கப்படும் 3 ராசிகள்! மிதுன செவ்வாய்!

ராகு பரிகாரம்
மயில் இறகு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்களை அகற்ற மயிலிறகை வீட்டில் வைக்கலாம். மயில் இறகு, வெற்றிலை பாக்கு கங்கை நீர் ஆகிய மூன்றும் வீட்டில் இருந்தால், ராகு சாந்தியடைந்துவிடுவார்.  

பண வரவு அதிகரிக்கும்

நிதி நெருக்கடியால் அவதிப்படுபவர்கள், தங்கள் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருந்தால், பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். அதேபோல, சிறிய மயில் இறகை சிவப்பு நூலால் கட்டி வீட்டின் பணப்பெட்டியில் வைத்தால் பணவரத்து அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!

தாம்பத்தியத்தில் நெருக்கம்
கணவன்-மனைவி உறவில் திருப்தி இல்லாமல் இர்நுதால், அந்தக் கசப்பை நீக்க மயில் இறகு உதவும். வீட்டில் மயிலிறகை வைத்தால், தம்பதிகளுக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். கிருஷ்ணர் காதலின் சின்னம், தனது காதலியான ராதையின் நினைவாக தலையில் மயில் இறகு சூடியவர். திருமண உறவுகளை வலுப்படுத்த, படுக்கையறையில் மயில் இறகுகளை வைக்கலாம். இது கணவன் மனைவில் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் மயிற்பீலி

குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கவும் மயில் இறகு உதவும். குழந்தைகளின் புத்தகங்களில் மயிலிறகை வைக்கும் வழக்கம் நினைவுக்கு வருகிறதா? இதற்கு காரணம், படிப்பின் மீதான விருப்பத்தை மயிலிறகு அதிகரிக்கும். எனவே, குழந்தைகளின் அறையில், புத்தகப் பைகளில் அல்லது அவர்கள் அதிகம் படிக்கும் புத்தகத்தில் மயில் இறகுகளை வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | திருமணத்தடைகளை விலக்கி சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் செவ்வாய்ப் பெயர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News