முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்

Kakkum Karangal Scheme | காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kakkum Karangal Scheme | காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

1 /7

தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வரின் காக்கும் கரங்கள் (Kakkum Karangal Scheme) என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 /7

இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின்போது இறந்த முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள், மணமாகாத, கணவனை இழந்த மற்றும் கணவனை பிரிந்த முன்னாள் படைவீரர்களின் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

3 /7

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.

4 /7

இத்திட்டத்திற்கான வழிமுறைகள்: முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55. மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55. 

5 /7

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை.

6 /7

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04146 - 220524 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எாப்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

7 /7

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்/ இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் 28:02.2025-க்குள் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரவர் நல உதவி இயக்குதர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் காப.கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.