மீண்டும் பழைய ஓய்வூதியம்!! ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜாக்பாட்!!

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வந்துள்ள புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினமும் பல புதுப்பிகளும் வந்துகொண்டு இருக்கின்றன. 

1 /8

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

2 /8

தற்போது வந்துள்ள புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

3 /8

செயல்முறை முடிந்ததும், நவம்பர் 30ம் தேதிக்குள் இதற்கான உத்தரவுகள் வெளியிடப்படலாம். முன்னதாக இந்த வசதி மத்திய ஊழியர்களுக்கு மார்ச் மாதம் வழங்கப்பட்டது.   

4 /8

ஜூலையில், அகில இந்தியப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் இந்த விருப்பத்தின் பலன் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஓய்வு பெற்ற ஊழியர்களிடமிருந்தும் இந்த விருப்பத்தின் பலனை அவர்களுக்கு வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதற்காக மத்திய அரசு மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டது.  

5 /8

நவம்பர் 7 அன்று இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தால் அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்த விருப்பத்தை பயன்படுத்தும் மத்திய பணியாளர்களுக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி உத்தரவுகளை ஆணையம் வெளியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பான உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிறப்பிக்கப்பட இருந்தது.

6 /8

இது தொடர்பாக கடைசி தேதியை நீட்டிக்குமாறு நியமன அதிகாரியால் கோரப்பட்டதன் அடிப்படையில் DoPPW ஆல் கட் ஆஃப் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து, இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கான கட்-ஆஃப் தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை DoPPW நீட்டித்துள்ளது. 

7 /8

மத்திய அரசு வழங்கிய முடிவின்படி, மத்திய அரசுப் பணியாளர்கள் ஓய்வூதிய விதிகள் 1972ன் கீழ், 22 டிசம்பர் 2003 -க்கு முன்னால் விளம்பரம் செய்யப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்காக மத்திய அரசு பணிகளில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான விருப்பம் அளிக்கப்படும். அத்தகைய பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

8 /8

இதற்கான உத்தரவுகள் 2023 மார்ச்சில் வெளியிடப்பட்டன. இருப்பினும், இந்த காலகட்டத்தில், உத்தரவு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்ற சில ஊழியர்கள் இருந்தனர். ஓய்வுக்குப் பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விருப்பம் கிடைக்குமா என்று சமீபத்தில் அவர்கள் கேட்டிருந்தார். இந்த திட்டத்தில் நிபந்தனையுடன் சேரவும் அரசு உத்தரவிட்டது.