தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) திட்டத்தில் கிடைக்கும் பலன்கள்!

தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) என்பது ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும், இது நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தை சேமிக்க உதவும்.

1 /4

என்எஸ்சி திட்டத்தில் 3 பெரியவர்கள் வரை கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்து கொள்ளலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் அல்லது மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை தொடங்கி கொள்ளலாம்.  

2 /4

01.04.2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதமானது ஆண்டுதோறும் கூட்டுத்தொகையாக 7.7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இது முதிர்ச்சியின்போது செலுத்தப்படும். என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திசேமிக்க ல் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் மற்றும் இதில் அதிகபட்ச வரம்பு இல்லை.

3 /4

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக்கொள்ளலாம். இதிலுள்ள டெபாசிட்டுகளுக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

4 /4

என்எஸ்சி சேமிப்பு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்ததும் உங்கள் கணக்கு முதிர்ச்சியடையும்.