துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்

Bathing Rituals : உடம்பில் துணியே இல்லாமல் குளித்தால் மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

Bathing Rituals News Tamil : உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் குளித்தால் மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாகி, மன நிம்மதியை இழப்பீர்கள். எப்போதும் அரைகுறை ஆடை அணிந்தே குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

1 /7

நவீன காலத்தில் பாத்ரூம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டதால் எல்லோரும் வெளியில் குளிப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் பொதுவெளியில் ஆறு, குளங்களில் தான் குளிப்பார்கள். அப்படி குளிக்கும்போது ஒருபோதும் நிர்வாணமாக குளிக்கவே மாட்டார்கள்.

2 /7

உடம்பில் அரைகுறை ஆடையுடன் தான் குளிப்பார்கள். ஏனென்றால் முந்தைய காலங்களில் பாம்பு, பூச்சிகள் கடித்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். குழந்தைகளைக் கூட அரைகுறை ஆடை அணிந்தே குளிப்பாட்டுவார்கள். 

3 /7

குளியல் குறித்து சாஸ்திரம் ஏதேனும் சொல்லியிருக்கிறதா? என்றால், ஆம் சொல்லியிருக்கிறது. நிர்வாணமாக குளிப்பது மகாலட்சுமிக்கு பிடிக்கவே பிடிக்காது. வருண பகவானுக்கு சுத்தமாக பிடிக்காது. சாஸ்திரத்தின்படி நிர்வாணமாக குளிப்பது ஒரு பாவம்.  

4 /7

இந்த பாவத்தை செய்பவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும், குடும்பத்தில் புது பிரச்சனைகள் எல்லாம் வெடிக்கும். எப்போது குளித்தாலும் முழு ஆடைகளை அணிந்தே குளிக்க வேண்டும். 

5 /7

குறைந்தபட்சம் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டாவது குளிக்க வேண்டும். குளிக்கும் நீர் அதிக சூடாகவும் இருக்கக்கூடாது, அதிக குளிராகவும் இருக்க கூடாது. தண்ணீரை எப்போதும் கால் பாத த்தில் இருந்து ஊற்றி கடைசியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும். 

6 /7

குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் வேப்பிலை கலந்து குளித்தால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். சோம்பல் நீங்க சுறுசுறுப்பு உண்டாகும். உடலில் இருக்கும் தீய விஷயங்கள் வெளியேறும். தீய சக்திகள், திருஷ்டி தோஷங்கள் ஒழிந்து போகும். 

7 /7

ஆண்கள் சனிக்கிழமைகளிளும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பல விதமான வியாதிகளை போக்க வல்லது. மனமும், உடலும், குடும்பமும் தூய்மையுடன் பாதுகாப்பாக இருக்க முன்னோர்கள் சொல்படி கேட்டு நடந்தால், எப்பொழுதும் நமது கெட்டது நடக்காது, நன்மைகள் தான் நடக்கும்.