Viral Video: சீறும் கருநாகங்களை கூலாக குளிப்பாட்டும் பெண்... இணையத்தை கலக்கும் வீடியோ!

பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும். ஒன்று இரண்டு அல்ல... உங்களைச் சுற்றி 10-20 பாம்புகள் கூடினால், பீதி அடைவது இயற்கை. அதுவும் குறிப்பாக நாகப்பாம்பாக இருந்தால், தலை தெறிக்க ஓடுவதே முதல் வேலையாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2022, 02:16 PM IST
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ.
  • பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும்.
  • வீடியோ uwakeup என்னும் கணக்கிலிருந்து Reddit தளத்தில் பகிரப்பட்டது.
Viral Video: சீறும் கருநாகங்களை கூலாக குளிப்பாட்டும் பெண்... இணையத்தை கலக்கும் வீடியோ! title=

பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும். ஒன்று இரண்டு அல்ல... உங்களைச் சுற்றி 10-20 பாம்புகள் கூடினால், பீதி அடைவது இயற்கை. அதுவும் குறிப்பாக நாகப்பாம்பாக இருந்தால், தலை தெறிக்க ஓடுவதே முதல் வேலையாக இருக்கும். ஆனால், இங்கே இளம் பெண் ஒருவர் பாம்புகளை குளிப்பாட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பெண் முதலில் தண்ணீரை கரு நாகப் பாம்புகள் மீது ஊற்றுவதும், பின்னர் இந்த பெண் குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சி  பாம்புகளை குளிக்க வைப்பதையும் காணலாம். வீடியோவின் முடிவில், சிறுமியும் கையில் பாம்பை எடுத்துக் கொண்டு, தலையாட்டும் பாம்பின் செய்கையை இமிடேட் செய்வதைக் காணலாம். இந்த 42 வினாடி வீடியோவை பார்க்கும் அனைவருக்கு வியப்பைக் கொடுக்கும். இந்த வீடியோ சமூக வலைதளமான ரெடிட்டில் பகிரப்பட்டுள்ளது.

வைரலாகும் பாம்பு வீடியோவை கீழே காணலாம்: 

இந்த வீடியோ uwakeup என்னும் கணக்கிலிருந்து reddit இல் பகிரப்பட்டது. இதற்கு இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. பல பயனர்கள் தங்களை கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். இதில் ஒரு பயனர், "இவை நாகப்பாம்புகள், குறைந்த பட்சம் பயப்படுவது போல் பாசாங்காவது செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "இந்த பெண் பாம்புகளை குளிப்பாட்டவில்லை, தரையை சுத்தம் செய்கிறாள்" என்று எழுதினார்.

மேலும் படிக்க | Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்!

 சில பயனர்கள் பாம்புகளின் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் மற்றும் இந்த வீடியோவை பாம்புகளுடன் விளையாடுவதாக விவரித்துள்ளனர். அதே சமயம் ஒரு பயனர் எழுதுகையில், "இந்த பாம்புகளின் விஷம் அகற்றப்பட்டது என நினைக்கிறேன், அப்படி இருந்தால், அது பாம்புகளை கொடுமை படுத்துவதாகும்" என பதிவிட்டுள்ளார். ஆனால் மற்றொரு பயனர், அவர்களின் விஷம் நீக்கப்பட்டது என்று எப்படி கூற முடியும்.?? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க | கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News