முடி உதிர்வுக்கான தீர்வு குறித்து இங்கு பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை தடுப்பது எப்படி? நிரந்தர தீர்வு என்ன? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவில் அதிகப்படியான புளிப்பு சுவை இருந்தால் நச்சுக்கள் உருவாகும். இதனால் முடி உதிர்வு ஏற்படும்.
தைராய்ட்டு பிரச்னை இருப்பவர்களுக்கும் முடி உதிர்வு பிரச்னை அதிகமாக காணப்படும்.
இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றமல், எத்தனை ஹேர் ஆயில் பயன்படுத்தினாலும் முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.
எனவே முதலில் ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும். முடி உதிர்வு இருக்கும் நபர்கள் அதிகம் இரும்பு சத்து கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக முருங்கைக்கீரையை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே கறிவேப்பிலையை பொடியாக்கி தேனில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி செய்கையில் முடி உதிர்வை தடுக்க முடியும்.