SIP vs PPF: ஓய்வு காலத்திற்காக கோடிகளில் நிதியை சேர்க்க உதவும் முதலீட்டு திட்டம் எது?

SIP vs PPF: ஓய்வுக்கு பிறகு நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க, சரியான திட்டமிடல் அவசியம். நல்ல வருமானத்தை கொடுக்கும் திட்டங்களில் SIP மற்றும் PPF ஆகிய இரு முதலீடுகள் நல்ல தேர்வாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2025, 07:37 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டமாகும்.
  • PPF திட்டத்தில் வரி சலுகை உள்ளது.
  • ரூ.100 என்ற அளவில் கூட SIP திட்டத்தை தொடங்கலாம்.
SIP vs PPF: ஓய்வு காலத்திற்காக கோடிகளில் நிதியை சேர்க்க உதவும் முதலீட்டு திட்டம் எது? title=

SIP vs PPF: ஓய்வுக்கு பிறகு நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க, சரியான திட்டமிடல் அவசியம். நல்ல வருமானத்தை கொடுக்கும் திட்டங்களில் SIP மற்றும் PPF ஆகிய இரு முதலீடுகள் நல்ல தேர்வாக இருக்கும். 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆண்டு தோறும் ரூ. 1,00,000 முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில்,  SIP மற்றும் PPF ஆகிய இரு ஆப்ஷன்களில் ஓய்வூதிய நிதி அதிகம் கிடைக்க உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.

முறையான முதலீட்டுத் திட்டம் (SIP)

ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது SIP மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியங்களில் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்வதற்கான எளிய வழியாகும். இதற்கான முதலீட்டினை ரூ. 100 இல் தொடங்கி ஒரு நிலையான தொகையை வழக்கமான இடைவெளியில் முதலீடு செய்யலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி  என்பது அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டமாகும். நீண்ட கால சேமிப்பு திட்டமான இது, நிலையான வருமானம் மற்றும் வரி சலுகைகளை வழங்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும்.

வரி சலுகைகள்

PPF முதலீடுகள், வட்டி மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் ஆகிய அனைத்தும் பிரிவு 80C இன் கீழ் முற்றிலும் வரி இல்லாதவை. இதன் பொருள் நீங்கள் எந்த வரிகளையும் செலுத்தாமல் உங்கள் வருமானத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.

PPF திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம்?

2025 பிப்ரவரி நிலவரப்படி, இந்தியாவில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான (PPF) வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும். இந்த விகிதம் 2020 ஏப்ரல் மாதம் முதல் திருத்தங்கள் ஏதும் இல்லாமல் நீடிக்கிறது.

SIP திட்டத்தை தொடங்குவதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை

நீங்கள் ரூ.100 என்ற அளவில் SIP-ஐத் தொடங்கலாம். கூடுதலாக, தேவைக்கேற்ப உங்கள் SIP முதலீடுகளை அதிகரிக்க, குறைக்க அல்லது நிறுத்த உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது.

PPF திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை

PPF திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் ஒரு வருடத்தில் குறைந்தது ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வருடத்தில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம்.

PPF முதலீட்டில் கிடைக்ககூடிய ஓய்வூதிய நிதி 

ஆண்டு முதலீடு: ரூ. 1,00,000 (மாதாந்திர முதலீடு ரூ. 8333 x 12 மாதங்கள்)

காலம்: 35 ஆண்டுகள்

வட்டி விகிதம்: 7.1 சதவீதம்

ரூ. 1,00,000/ஆண்டு பங்களிப்பில், 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ. 1,51,31,905 ஆக இருக்கும்.

SIP முதலீட்டில் கிடைக்ககூடிய ​ ஓய்வூதிய நிதி

SIP முதலீடுகள் சந்தை நிலையை பொறுத்தது என்பதால், நிலையான வருமானத்தைக் தருவதில்லை. கடன் நிதிகளுக்கு 8 சதவீதமும், பங்கு நிதிகளுக்கு 10 சதவீதமும், கலப்பின நிதிகளுக்கு 12 சதவீதம்  என்ற அளவில் வருமானம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் மாதம் ரூ.8,333 (1,00,000/12) என்ற மாத முதலீட்டை கருத்தில் கொண்டால் கிடைக்கும் வருமானத்தை அறிந்து கொள்ளலாம்.

35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.8,333  SIP  முதலீட்டில் கிடைக்ககூடிய ​ ஓய்வூதிய நிதி (கலப்பின நிதியில் முதலீடு செய்தால்) 

முதலீட்டிற்கு கிடைக்கும் 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.4,59,21,756 ஆக இருக்கும். அந்த நேரத்தில், முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.34,99,860 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.4,24,21,896 ஆகவும் இருக்கும்.

35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.8,333  SIP  முதலீட்டில் கிடைக்ககூடிய  ஓய்வூதிய நிதி (ஈக்விட்டி நிதியில் முதலீடு செய்தால்)

முதலீட்டிற்கு கிடைக்கும் 10 சதவீத வருடாந்திர வருமானத்தில், 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.2,85,47,970 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.2,50,48,110 என்ற அளவிலும் இருக்கும்.

35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.8,333  SIP  முதலீட்டில் கிடைக்ககூடிய  ஓய்வூதிய நிதி (கடன் நிதியில் முதலீடு செய்தால்)

முதலீட்டிற்கு கிடைக்கும் 8 சதவீத வருடாந்திர வருமானத்தில், 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.1,79,68,889 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,44,69,029 ஆக இருக்கும்.

SIP எவ்வாறு செயல்படுகிறது?

1. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்படும்.
2. ஒரு நிலையான தொகை வழக்கமான இடைவெளியில் கழிக்கப்படுகிறது.
3. பணம் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படுகிறது.
4. அதன் தற்போதைய மதிப்பு (NAV) அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட பரஸ்பரநிதியின் யூனிட்களை பெறுகிறீர்கள்.

PPF எவ்வாறு செயல்படுகிறது?

தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தில் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம். ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | சீனியர் சிட்டிஸன் FD... யாருக்கெல்லாம் TDS கழிக்கப்படாது... முழு விபரம் இங்கே

மேலும் படிக்க | மலிவு விலையில் கடன் வழங்கும் கிசான் கிரெட் கார்டு: விவசாயிகளுக்கு வந்த முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News